முல்லைத்தீவு காணி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற மண்ணாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. தடயவியல் பரிசோதனை ஆனந்தபுரம் கிஸ்ணர் கோவிலுக்கு அருகில் உள்ள காணி ஒன்றில் நேற்று (11.10.2022) கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று (12.10.2022) முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.